Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருபுவனம் ராமலிங்கம் முதலாம் ஆண்டு நினைவு தினம்

பிப்ரவரி 05, 2020 09:36

கும்பகோணத்தில் மத மாற்றம் செய்தததைக் கண்டித்ததாகக் கூறி கடந்த ஆண்டு கொல்லப்பட்ட திருபுவனம் ராமலிங்கம் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி  உருவப்படத்திற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த சிலர் (இஸ்லாமியர்கள்) இந்துக்களை மத மாற்றம் செய்வதாகக் கூறி அவர்களை தட்டிக் கேட்டார் என்பதற்ககாக திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை செய்து சிலரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்ட தினமான இன்று திருபுவனத்தில் அவரது உருவப் படத்திற்கு சமூக ஆர்வலர் ம.க.ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

தலைப்புச்செய்திகள்